"ஒரு வரி கவிதைகள்!"

09/12/2020 11:26 AM | Anonymous

ஒரு வரி கவிதைகள்

நான் கண்ட தோல்வி...பாதையாய் மாறியது ....என் வெற்றியை அடைய...

நான் முட்டாளாய் இருக்க விரும்புகிறேன்... அனுபவத்தை பெற...

உதவிகள் பல....அதை அனுபவித்தவர்கள் சில...

"நான் இருக்கிறேன்"....தன்னம்பிக்கை என்னிடம் சொன்னது.

"மௌனம்" எனக்கு பிடித்த மொழி...அதுவே என் கற்பனையின் வழி.

"கற்பனை" ... மனிதர்களால் அழிக்க முடியாத ஆயுதம்...

நேற்று - நான் கடந்து வந்த பாதை

இன்று - என்னிடம் இருப்பது

நாளை - அது என் கனவு

அனல் கூட அணைந்து போகும் - அன்பு எனும் காற்று வீசும்போது

இலக்கு தூரமாக இருக்கலாம்!

கடந்து போகும் பாதை கடினமாக இருக்கலாம் !

செய்யும் வேலையை (தொழிலை) காதலித்து பார்...

கடினமும் இன்பமாகும், தூரமும் எட்டிய தொலைவில் கிடைக்கும்!!

- முனைவர் ச. தமிழ் செல்வன்


Muthamizh Sangam of Central Florida, Inc.  |  1156 Hollow Pine Dr, Oviedo, FL 32765   | contact us at mscf.ec@gmail.com

A registered, non-profit 501(c)(3) organization. Your contributions may be tax deductible. MSCF's Tax ID is 59-3327604.

Powered by Wild Apricot Membership Software